தஞ்சாவூர், மே 8 - தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக் கழக மேலாண்மை துறையில் “ப்ரொகியான் 22” என்ற மேலாண்மைத் துறை மாண வர்களுக்கு தேசிய அளவிலான போட்டிகள் ஏப்.29 அன்று நடைபெற்றன. போட்டியை பெங்களூரு சிடிஎஸ் நிறுவ னத்தின் முதுநிலை இயக்குநர் சத்யநாரா யண பழனியப்பன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து, மாணவர்களின் அணுகுமுறை, பேச்சாற்றல், சந்தையியல் பற்றிய நுணுக்கத் தையும், தலைமைத்துவ பண்புகள் பற்றியும் சிறப்புரையாற்றினார். நிகழ்வில் சாஸ்த்ரா மேலாண்மை துறை தலைவர் முனைவர் வே. பத்ரிநாத் முன்னிலை வகித்து இப்போட்டி யின் முக்கியத்துவம், மாணவர்களின் திறன் மேம்பாடு குறித்து பேசினார். இந்நிகழ்ச்சியில் சந்தை, நிதி, மனித வள மேம்பாடு, புகைப்படம், சிறந்த மேலாளர் மற்றும் பலவித தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் 15-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களிலிருந்து, மேலாண்மைத் துறை சார்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கர்நாடக மாநிலங்களிருந்து கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிட்டி யூனியன் வங்கி பொது மேலாளர் ஆர். லட்சுமிநாராயணன் சிறப்புரையாற்றி பரிசு களை வழங்கினார். இந்த போட்டியில் அதிக புள்ளிகளை பெற்று ஒட்டு மொத்த கோப் பையை பெங்களூருவை சேர்ந்த ஐஎஸ்பி ஆர்-பி ஸ்கூல் வென்றது.