districts

img

செருவாவிடுதி, கழனிக்கோட்டையில் சுகாதார கட்டடங்கள் திறப்பு

தஞ்சாவூர், ஜூன் 19- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதியில் இயங்கி வரும் தரம் மேம்படுத் தப்பட்ட அரசு ஆரம்ப சுகா தார நிலைய வளாகத்தில், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடப்பட்டுள்ளது. இதை தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில், தமிழக சுகா தாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செவ் வாய்க்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.  

தொடர்ந்து செருவா விடுதி ஆரம்ப சுகாதார நிலை யத்தில் நடந்த விழாவில் பேராவூரணி சட்டப்பேர வை உறுப்பினர் நா. அசோக்குமார், குத்து விளக் கேற்றி புதிய கட்டிடத்தினை மக்கள்  பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.  சேதுபாவாசத்திரம்  இதேபோல், சேதுபாவா சத்திரம் ஒன்றியம், முடச்சிக் காடு ஊராட்சி கழனிக் கோட்டை கிராமத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதி தாக கட்டப்பட்ட அரசு துணை சுகாதார கட்டடத்தை காணொ லிக் காட்சி மூலம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அதனைத் தொ டர்ந்து கழனிக்கோட்டை யில், புதிய துணை சுகாதார கட்டிடத்தில் பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.