districts

பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையும் பயணச்சீட்டு முன்பதிவு மையம் இயங்கும்

தஞ்சாவூர், நவ.11 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ரயில்  நிலையத்தில், பயணச்சீட்டு முன்பதிவு மையம் திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் மதியம் 2  மணி வரை இயங்கி வந்தது. ஞாயிற்றுக்கிழமை களில் இயங்கவில்லை. இதனால் பயணச்சீட்டு முன்பதிவு செய்யவும், தட்கல் முன்பதிவு செய்ய வும் பயண சீட்டு முன்பதிவை ரத்து செய்யவும், ஞாயிற்றுக்கிழமைகளில் முன்பதிவு மையங்கள் இயங்கி வரும் வெளியூர் ரயில் நிலையங்களுக்கு பய ணிகள் செல்ல வேண்டியிருந்தது. இது ரயில் பயணிகளுக்கு மிகவும்  சிரமமாக இருந்தது.  திருச்சி கோட்ட ரயில்வே  மேலாளர் மணிஷ் அகர் வால் பட்டுக்கோட்டை ரயில்  நிலையத்திற்கு ஆய்வுக்கு  வந்தபோது, பட்டுக் கோட்டை வட்ட ரயில் பயணி கள் நலச் சங்கத்தின் தலை வர் என்.ஜெயராமன் மற்றும்  உறுப்பினர்கள், “பட்டுக் கோட்டை ரயில் நிலையத் தில் ஞாயிற்றுக்கிழமையும் முன்பதிவு மையம் செயல் பட வேண்டும்” என கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்றுக் கொண்ட திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர், பட்டுக் கோட்டை ரயில் நிலையத் தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 2 மணிவரை பயண சீட்டு முன்பதிவு மையம் இயங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து, திருச்சி கோட்ட ரயில்வே மேலா ளர் மற்றும் முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர்  ஆகியோருக்கு பட்டுக் கோட்டை வட்ட ரயில் பயணி கள் நலச் சங்கத்தினர் நன்றி  தெரிவித்தனர்.