districts

மீன்பிடி துறைமுகங்களில் படகுகளை நிறுத்த ஏற்பாடு செய்க! சேதுபாவாசத்திரம் கடைவீதியில் சிபிஎம் தர்ணா

தஞ்சாவூர், ஆக.16 -  பொதுமக்களின் நீண்டகால உள்ளூர் அடிப்படைக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கழுமங்குடா, மீனவர் காலனி,  காரங்குடா, மரக்காவலசை, சம்பைப்பட்டி னம் கிளைகள் சார்பில் சேதுபாவாசத்திரம் கடைவீதியில் தர்ணா போராட்டம் நடைபெற் றது.  கழுமங்குடா கிளைச் செயலாளர் கே. முருகன் தலைமை வகித்தார். சேதுபாவா சத்திரம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எம். வீரப்பெருமாள், சிபிஎம் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், வழக்கு ரைஞர் வீ.கருப்பையா, ஒன்றியக் குழு உறுப்பினர்கள், மீனவர் சங்க மாவட்டச் செய லாளர் ஆர்.கர்த்தர் ஆகியோர் கோரிக் கைகளை வலியுறுத்திப் பேசினர்.  மீன்பிடி துறைமுகங்களில், ஆற்று முகத்துவாரத்தை தூர்வாரி ஆழப்படுத்தி, படகு நிறுத்த வசதி செய்து தர வேண்டும்.  ஒளிராத தெருவிளக்குகளை சரி செய்து  ஒளிரச் செய்ய வேண்டும். சாலைகளை செப்ப னிட்டு தர வேண்டும். குடிதண்ணீர் தட்டுப்பா டின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நத்தம் புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, குடி மனைப் பட்டா இல்லாத ஏழைகளுக்கு பட்டா  வழங்க வேண்டும். மழைநீர் வடிகால் வாய்க் கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தப்பட்டன.

;