தஞ்சாவூர், ஏப்.10- தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் தேரோட்டம், ஏப்ரல் 13 (புதன்கிழமை) அன்று நடைபெற வுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ஆட்சியர் கூறியதாவது: தேரோட்டம் ஏப்ரல் 13 அன்று காலை 6:30 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடைபெறவுள்ளது. தேரோட்டம் சிறப்பாக நடை பெறும் பொருட்டு பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. திருத்தேர் வடம் பிடிக்கப் பட்டு பிற்பகல் தேர் புறப்படும் இடமாகிய மேலவீதியில் உள்ள தேர் மண்டபத்தை வந்தடையும். இத்தேர் திருவிழா நான்கு ராஜ வீதிகளான மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி, கீழராஜவீதி, தெற்கு ராஜவீதிகளில் நடைபெறும். மேலும், மேல் ராஜவீதியில், சந்துமாரியம்மன் கோயில் கொங் கணேஸ்வரர் கோயில், மூலை ஆஞ்சநேயர் கோயில் ஆகிய கோயில்களிலும், வடக்கு ராஜ வீதி, பிள்ளையார் திருக்கோவில் அருகில் இரத்தினபுரீஸ்வரர் கோயில், குருகுல சஞ்சீவி கோயில் ஆகிய கோயில்களி லும், கீழ ராஜ வீதியில் கொடி மரத்து மூலை, விட்டோபா கோயில், மணிகர்ணிகேஸ்வரர் கோயில், வரதராஜப்பெருமாள் கோயில் ஆகிய கோயில்களிலும் தெற்கு ராஜவீதியில் கலியுக வெங்கடேச பெருமாள் கோயில், கனரா வங்கி பிள்ளையார் கோயில் காசி விஸ்வநாதர் கோயில் காளி யம்மன் கோயில் ஆகிய கோயில் களிலும் பக்தர்கள் வசதிக்காக வும், சுவாமி தரிசனத்திற்காக வும், தேங்காய் பழம் படைப்ப தற்காகவும் திருத்தேர் நிறுத்தப் படும்” என்றார். இந்த ஆய்வின் போது, தஞ்சா வூர் மாநகராட்சி உதவிப் பொறி யாளர் கார்த்திகேயன், அரண் மனை தேவஸ்தானம் உதவி ஆணையர் ச.கிருஷ்ணன், கண்காணிப்பாளர் தா.அர விந்தன், மேற்பார்வையாளர் ரெங்கராஜன் சங்கர், தஞ்சாவூர் வட்டாட்சியர் மணிகண்டன் மற் றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.