districts

ஏப்.11, 18, 25-மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்

தஞ்சாவூர், ஏப்.7-  தஞ்சை மாவட்டத்தில் 3 இடங்களில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் நடை பெறுகிறது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.    தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், ‘‘தஞ்சை கோட்டத்தில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள  அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் ஏப்ரல் 11  அன்று (செவ்வாய்க்கிழமை) முகாம் நடை பெறுகிறது. கும்பகோணம் கோட்டத்தில் கும்பகோணம் கே.எம்.எஸ்.எஸ். வளாகத் தில் ஏப்ரல் 18 அன்று (செவ்வாய்க்கிழமை), பட்டுக்கோட்டை கோட்டத்தில் ஏப்ரல் 25  அன்று (செவ்வாய்க்கிழமை) பட்டுக் கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில்  உள்ள கிராம சேவை கட்டிடத்திலும் நடை பெறுகிறது.   இம்முகாமில் எலும்பு முறிவு, காது மூக்கு  தொண்டை பிரிவு, மன நலம் மற்றும் கண்  மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு மருத்துவர் கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச்சான்று வழங்க உள்ளார்கள். மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. எனவே, தஞ்சை மாவட்டத்தில் இதுநாள்  வரை அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல்,  ஆதார் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படத் துடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவ ணங்களுடன் வந்து கலந்துகொண்டு பயன் பெறலாம்’’ எனக் கூறப்பட்டுள்ளது.

;