districts

39 பதவிகள் ஒழிப்பு கூட்டு நடவடிக்கை குழு கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், டிச.15-  சென்னை மின்வாரிய தலைமை அலுவலக நிர்வா கப் பிரிவு மற்றும் தொழில் நுட்ப நிர்வாகப் பிரிவு ஆகி யவற்றை மின்வாரிய நிர்வா கம் ஒன்றாக இணைத்து உத்  தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் 39 பதவிகள் ஒழிக்கப்பட்டுள்ளன. மேலும் தொழிற்சங்கங்களை கலந்து பேசாமல் மின்வாரி யம் தன்னிச்சையாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள் ளது.  இதனைக் கண்டித்து, மின்வாரிய தொழிற்சங்கங்க ளின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், தஞ்சாவூரில் தமிழ்  நாடு மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அலு வலக வாயிலில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மண்டலச் செய லாளர் எஸ்.ராஜாராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில், மத்திய அமைப் பின் பொருளாளர் சங்கர், சம்மேளனம் செயலாளர் பொன்.தங்கவேல், ஐக்கிய சங்கம் பொருளாளர் பார வேல், பொறியாளர் கழக நிர்வாகிகள், பொறியாளர் சங்கம் மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.