தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் கும்பகோணம்- திருவையாறு மெயின் சாலையின் வளைவில் அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இந்த வளைவு பகுதியில் வரும் வாகனங்கள் தெரியாததால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, அய்யனார் கோயில் அருகில் இருபுறமும் வேகத் தடை அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.