districts

img

பழுதடைந்து கிடக்கும் பயணியர் நிழற்குடை

பாபநாசம், ஜூன் 29 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை அடுத்த மாகாளிபுரத்தில் அய்யம் பேட்டை-கணபதி அக்ஹாரம், சாலையோரம் பயன்பாடின்றி, பழுதடைந்த நிலையில் பயணியர் நிழற்குடை உள்ளது. பழுதடைந்த இந்த நிழற்குடை எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில், மக்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளது. மழைக்குக்கூட இந்த பயணியர் நிழற்குடையில் ஒதுங்க முடியாது. இதன் அருகில் குப்பைகளும் கொட்டப்படுகின்றன. மாவட்ட நிர்வாகம் இதில் உரிய கவனம் செலுத்த வேண்டுமென அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.