தஞ்சாவூர், ஜூன் 22- மதுரையில் உள்ளது போன்று புத்தகப் பூங்கா அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார் மக்க ளவை உறுப்பினர் ச.முரசொலி.
தஞ்சாவூரில் செய்தியாளர் களிடம் அவர் வெள்ளிக்கிழமை மாலை தெரிவித்ததாவது:
தஞ்சாவூரில் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட மக்களின் குறைகளைக் கேட்டறி வதற்காக நாடாளுமன்றத் தொகுதி அலுவல கம் 40 நாள்களில் அமைக்கப்படும். இதன் மூலம் மக்களின் குறைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
தஞ்சாவூர் பெரியகோயில் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்ப தற்காக மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெரியகோயில் எதிரே உள்ள அரசு ராசா மிராசுதார் மருத்து வமனை சுற்றுச்சுவர், பழைய கட்டடத்தை இடித்துவிட்டு சோழன் சிலை பகுதியை இணைக்கும் விதமாக புதிய பாதை அமைப் பதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பது தொடர்பாக ஆலோ சனை செய்யப்படுகிறது.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் காரணமாக கூடுதலாக பாலம் அமைக்கப்படவுள்ளது. தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் அலுவ லகம் பகுதியிலிருந்து டெம்பிள் டவர் பகுதியை இணைக்கும் விதமாக இப்பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் சாந்தபிள்ளை கேட் ரயில் மேம்பாலத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை இணைக்கும் விதமாக பாதை அமைக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள யூனியன் கிளப்பில் மதுரையில் உள்ளது போன்று புத்தகப் பூங்கா அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.