districts

img

சுகாதாரமற்ற உணவால் நாட்டில் 40 விழுக்காடு குழந்தைகள் பாதிப்பு

தஞ்சாவூர், ஜூன்8 -  நம் நாட்டில் சுகாதார மற்ற உணவால் 40 விழுக் காடு குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக் கப்படுகின்றனர் என்று ஒன்றிய அரசின் உணவு பதப் படுத்தும் தொழில் அமைச்ச கத்தின் கூடுதல் செயலரும், நிதி ஆலோசகருமான அசித் கோபால் தெரிவித்துள்ளார்

உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூரிலுள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவ னத்தில் (நிப்டெம்) வெள்ளிக் கிழமையன்று  மாணவர்க ளுக்கான விழிப்புணர்வு கரு த்தரங்கம் நடைபெற்றது.

இதில் அவர் மேலும் பேசியது:

உலகளவில் 10 பேரில் ஒருவர் சுகாதாரமற்ற உண வால் நோய்வாய்ப்படு கிறார். பாக்டீரியா, வைரஸ் கள், பாதிக்கப்படக்கூடிய ஒட்டுண்ணிகள் அல்லது கன உலோகங்கள் போன்ற ரசா யனப் பொருட்கள் கொண்ட அசுத்தமான உணவை சாப்பி டுவதால் 200-க்கும் அதிக மான நோய்கள் ஏற்படு கின்றன.

நம் நாட்டு மக்கள் தொகையில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் 9 விழுக்காடு பேர் உள்ளனர். இவர்களில் 40 விழுக்காடு பேருக்கு பாதுகாப்பற்ற உணவு காரணமாக ஊட்டச் சத்து குறைபாடு ஏற்பட்டு, அவர்கள் அதிக ஆபத்துக்கு ஆளாகின்றனர்.

உணவுப் பாதுகாப்பு என்பது உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை அனைவரின் கூட்டுப் பொ றுப்பாகும். உணவுப் பாது காப்பின் முக்கியத்து வத்தையும், உணவால் பரவும் நோய்களைத் தவிர்ப்பது எப்படி என்பதை யும் அனைவருமே அறிந்து கொள்ள வேண்டும். உணவு பதப்படுத்துதல், சுகாதா ரத்தின் முக்கியத்துவம், பாது காப்பான உணவு உண்பது ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அசித் கோபால் பேசினார்.

இக்கருத்தரங்கத்துக்கு தேசிய உணவு தொழில் நுட்பம், தொழில்முனை வோர் மற்றும் மேலாண்மை நிறுவன இயக்குநர் வெ. பழ னிமுத்து தலைமை வகித் தார். இந்திய உணவு அறி வியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வியலாளர் கள் சங்கத் தலைவர் நிலேஷ் அம்ரித்கர், கனடா நாட்டின் சஸ்காட்சுவான் பல்கலைக் கழகப் பேராசிரியர் வெங்க டேஷ் மேடா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கருத்தரங்கத்தில்  20 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 250-க்கும் அதி கமான மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, நிறுவன பேராசிரியர் வி.ஆர்.சினிஜா வரவேற்றார். நிறைவாக, இணைப் பேராசிரியர் டி.வி. சிதானந்த் நன்றி கூறினார்.