districts

img

இந்தியாவில் நிமிடத்துக்கு 112 பேருக்கு மாரடைப்பு விழிப்புணர்வு பயிற்சியில் தகவல்

தஞ்சாவூர், செப். 4 -  மனிதர்களுக்கு திடீரென  ஏற்படும் மாரடைப்பின் போது, நெஞ்சை அழுத்தி உயிர் காத்தல் எனும் முத லுதவி பயிற்சி அமெரிக்க தமிழ் மருத்துவர்கள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. தஞ்சாவூரில் நடை பெற்ற இந்த விழிப்புணர்வு செயல் விளக்கப் பயிற் சியை லயன்ஸ் சங்க நிர்வாகி  எஸ்.முகமதுரபி தொடங்கி வைத்தார். அமெரிக்கா வைச் சேர்ந்த அவசர சிகிச்சை மருத்துவ நிபுணர் ஐஸ்டீன் அருணாச்சலம், பொது மருத்துவர் கபி லன் தர்மராஜன் ஆகியோர்  பயிற்சியை வழங்கினர். இதில் செங்கல்பட்டைச் சேர்ந்த மருத்துவ பயிற்சி யாளர்கள் ராஜாராமன், தீபா, உமா ஆகியோர் செய ற்கை உருவப் பொம்மை களை வைத்து, செயல் விளக்கப் பயிற்சிகளை வழங்கினர். பயிற்சியை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு, பயிற்சி பெறும் மாணவர்களை ஊக்கப்படுத்தினார். இதுகுறித்து அமெரிக்க தமிழ் மருத்துவர்கள் சங் கத்தைச் சேர்ந்த ஐஸ்டீன் அருணாச்சலம், கபிலன் தர்மராஜன் ஆகியோர் கூறு கையில், “இந்தியாவில் ஒரு  நிமிடத்துக்கு 112 பேருக்கு மாரடைப்பு நோய் வரு கிறது.

மாரடைப்பு வரும் போது அதில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி என்ன  என்பது இந்தியாவில் பல ருக்கு தெரியாமல் உள்ளது. மாரடைப்பு வந்தால் நெஞ்சு பகுதியை தொ டர்ந்து 30 வினாடிகள் அழுத் தினால் மாரடைப்பினால் ஏற்படும் பாதிப்புகள் குறை யும். அதற்கான முதலுதவி குறித்த விழிப்புணர்வுகள் உலகில் 80 சதவீதம் பேருக்கு தெரியும். ஆனால்  இந்தியாவில் 1 சதவீதம் பேருக்குத்தான் இந்த விழிப்புணர்வு தெரியும்.  எனவே, இந்த விழிப்பு ணர்வை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தி யில் கொண்டு செல்ல முடிவு செய்தோம்.  இதற்காக அமெரிக்கா தமிழ் மருத்துவ சங்கத்தின் சார்பில் ஒரு மாத காலம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று,  அங்குள்ள லயன்ஸ் சங்கங் களோடு இந்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வை நடத்தி வருகிறோம். அதன்படி, தஞ்சாவூரில் 6  கல்லூரிகளைச் சேர்ந்த 100  மாணவர்களுக்கு இந்த பயிற் சியை நாங்களே நேரில் வழங்குகிறோம். இந்த விழிப்புணர்வையும் அது குறித்த பயிற்சியையும் தமிழக அரசின் கவனத் துக்கு கொண்டு சென்று அனைத்து கல்லூரி, பள்ளி களில் பயிலும் மாணவர் களுக்கு வழங்கப்பட உள்ளது” என்றனர்.  தஞ்சாவூரில் நடை பெற்ற பயிற்சிக்கான ஏற்பாடு களை, திட்ட ஒருங்கிணைப் பாளர் அ.ஸ்டாலின் பீட்டர் பாபு செய்திருந்தார்.

;