districts

img

மேட்டூர் அணையில் நீர்வளத்துறையினர் ஆய்வு

சேலம், ஜூலை 18- பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேட்டூர் அணையில் வியா ழனன்று நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கேரளம் மற்றும் கர்நாடக காவிரி  நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பரு வமழை தீவிரமாக பெய்து வருகிறது. கர்நாடகா அணைகள் நிரம்பியதால் அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி, காவிரியில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு அதிகரித்து வருவதால் மேட் டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, மேட் டூர் அணைக்கு வியாழனன்று காலை விநாடிக்கு 23,989 கனஅடியாக இருந்த நீர்வரத்து நண்பகல் 12 மணியளவில் 27,665 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நீர்வளத்துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியா ளர் (பொ) தயாளகுமார் மேட்டூர் அணைக்கு வந்தார். அணையின் வலது  கரை, இடது கரை, சுரங்க மின் நிலை யம் மற்றும் தண்ணீர் வெளியேறும் 8  கண் மதகு, 16 கண் பகுதி ஆகிய இடங் களில் ஆய்வு செய்தார். அணையில்  மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை குறித்து நீர்ளத் துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின்போது அணை செயற்பொறியாளர் சிவகுமார்,  உதவி செயற்பொறியாளர் செல்வராஜ்  உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்த னர்.