சேலம், ஜூன் 4- நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்த லில் இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற் றுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் பாஜக கூட்ட ணியை 3 ஆம் இடத்திற்கு தள்ளி திமுக கூட் டணி வேட்பாளர்கள் பெரும் வெற்றி பெற்றுள் ளனர்.
18 ஆவது மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை செவ்வாயன்று நடைபெற்றது. தமிழ்நாடு - புதுச்சேரியில் திமுக தலைமையி லான கூட்டணி 40க்கு 40 தொகுதிகளையும் வென்று, இந்திய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட் டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என தமிழ்நாட்டில் 4 முனைப்போட்டி நிலவி வந்தது. அனைத்து தொகுதிகளையும் திமுக கூட்டணி தன் வசப்படுத்தியுள்ளது. கொங்கு மண்டலமே தங்களின் பலம் என கூறி வந்த அதிமுக மற்றும் பாஜகவிற்கு பலத்த அடி விழுந்துள்ளது. பல்வேறு தொகுதிகளில் பாஜக 3 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதில், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி யில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.ஈஸ்வ ரசாமி 5 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இத்தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கார்த்திகே யன் 2 ஆம் இடமும், பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் 3 ஆம் இடத்திற்கும் தள்ளப்பட்டனர். அதேபோல ஈரோடு மக்களவைத் தொகுதி யில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.இ. பிரகாஷ் 5 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிக மான வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை தோல்வியடை யச் செய்துள்ளார். பாஜகவிலிருந்து விலகி, அதிமுக இணைந்தவுடன் ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ஆற்றல் அசோக் குமார் 2 ஆம் இடமும், நாம் தமிழர் கட்சி 3 ஆம் இடமும் பிடித்தனர். பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் வேட் பாளர் பி.விஜயகுமார் 4 ஆம் இடத்திற்கு தள்ளப் பட்டார்.
டெபாசிட் இழந்த பாஜக வேட்பாளர்
நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ் வரனுக்கும், அதிமுக சார்பில் போட்டியிட்ட தமிழ்மணிக்கும் இடையே ஆரம்ப கட்டத்தில் பெரும் இழுபறி நடைபெற்று வந்தது. இந்நிலை யில், அதிமுக வேட்பாளரைவிட மாதேஸ்வரன், கிட்டத்தட்ட 30 ஆயிரத்திற்கும் அதிகமான வாக் குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். இதில் பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம், 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத் தில் 3 ஆம் இடம் பிடித்து, தனது டெபாசிட் தொகையை இழந்தார்.
மண்ணை கவ்விய அண்ணாமலை, முருகன்
கொங்கு மண்டலத்தில் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட தொகுதிகளான கோவை மற் றும் நீலகிரி தொகுதிகளில் திமுக வேட்பாளர் கள் அபார வெற்றி பெற்றுள்ளனர். கோவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கணபதி ராஜ்குமார், பாஜக மாநிலத் தலைவ ரான அண்ணாமலையைவிட ஒரு லட்சத்திற் கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 3 ஆம் இடமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி 4 ஆம் இடமும் பிடித்த னர். முன்னதாக வாய் கிழிய பேசி வந்த அண்ணாமலை படுதோல்வி அடைந்த நிலை யில், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் திமுகவினர் ஆடு வெட்டி, மட்டன் பிரியா னியை கொடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
இதேபோன்று, பாஜக ஒன்றிய அமைச்ச ரான எல்.முருகன் நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட நிலையில், திமுக வேட்பாளரான ஆ.ராசாவிடம் மண்ணை கவ்வினார். கிட்டத் தட்ட 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தி யாசத்தில் ஆ.ராசா வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரான லோகேஷ் தமிழ்ச் செல்வன் 3 ஆம் இடமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளரான ஜெயகுமார் 4 ஆம் இடமும் பிடித்தனர்.
தொகுதியை கைவிட்ட எடப்பாடி
சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டி யிட்ட திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி 60 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தி யாசத்தில், அதிமுக வேட்பாளரான விக்னேஷை தோற்கடித்தார். இத்தொகுதியில் பாஜக கூட் டணி சார்பில் போட்டியிட்ட பாமக வேட்பாள ரான அண்ணாதுரை 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். நாம் தமிழர் கட்சி 4 ஆம் இடம் பிடித்தது. இந் நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி அனைத்து தொகுதிகளையும் இழந்த நிலை யில், அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப் பாடி பழனிச்சாமி-யின் சொந்த சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய, சேலம் மக்கள வைத் தொகுதியில் அதிமுக வேட்பாளரைக்கூட வெற்றிபெற வைக்க முடியவில்லை என்பது அக்கட்சி தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.