சேலம், மே. 3- ஓமலூர் காடையாம்பட்டி கோவில் தகராறு பிரச்சனையில் அமைதி சூழ்நிலையை உருவாக்க தமிழக அரசு தலையிட வேண்டும் என்றும் பட்டிய லின மக்களை கண்மூடித்தனமாக தாக்கிய போலீசாரின் செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி யுள்ளது.
பட்டியலின மக்களை தடுத்து கதவடைப்பு
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா பகுதிக்கு உட்பட்ட தீவட்டிப் பட்டி மாரியம்மன் கோவில் பண்டிகை கடந்த சில நாட்களாக நடந்து வந்துள்ளது. இந்நிலையில் 2 ஆம்தேதி கோவில்பண்டிகையில் அலகு குத்தி பக்தர்கள் ஊர்வலமாக வந்துள்ளார்கள். பட்டியலின மக்கள் அல்லாத பிற சமூக மக்கள் அலகு குத்தியதை கோவில் நிர்வாகம் அங்கீகரித்து அவர்களுக்கு திருநீறு கொடுத்து பூஜை செய்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் பட்டிய லின மக்கள் அலகு குத்தி வந்தபோது கோவிலுக்குள் உள்ளே நுழைய விடாமல் கதவை சாத்தியுள்ளனர்.
இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளில் இரு பிரிவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மோத லாக வெடித்துள்ளது. இரு தரப்பை யும் ஒழுங்கு செய்ய வேண்டிய காவல்துறை பட்டியலின மக்கள் வாழக் கூடிய குடியிருப்புப் பகுதிக்குள் சென்று கண்மூடித்தனமாக தாக்கி யுள்ளனர்.
கண்காணிப்பாளர் முன்பே தாக்குதல்
சாதி ஆதிக்க சக்தியினரின் தாக்கு தலை விட காவல்துறையின் கண்மூடித் தனமான தாக்குதலில் தான் இருபது க்கு மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந் துள்ளனர். ஐந்துக்கு மேற்பட்ட நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டதற்காக நியாயம் கேட்ட பட்டியலின மக்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை நியாயமான நிலை எடுக்காமல் அந்தப் பகுதியில் ஒரு பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் கபிலன் நேரடியாக தலித் மக்கள் குடி யிருப்பு பகுதிக்கு சென்றபோது தாக்கு தல் நடைபெற்றது என்பது மக்கள் மத்தி யில் காவல்துறையின் மீதும் நிர்வா கத்தின் மீதும் ஒரு அவநம்பிக்கையை உருவாக்கி உள்ளது. காவல்துறை கண்காணிப்பாளர் முன்பே தடியடி பிரயோகம் நடப்பது கண்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த தகவல் அறிந்த உடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பாதிக்கப்பட்ட இடத்தி ற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்கள். மேலும் காடையாம்பட்டி வட்டாட்சி யர், மற்றும் தீவட்டிப்பட்டி காவல் நிலைய அதிகாரிகள், ஓமலூர் காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் நேரடி யாக சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்ட தலித் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு நேரில் சென்று தடியடி பிரயோகத்தில் காயமான மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன் இந்த அநியாயமான நடவடிக்கைக்கு எதி ராகவும், காலம் காலமான வழிபாட்டு உரிமையை பெற்றுத்தருவதிலும் மார்க்சிஸ்ட் கட்சி துணை நிற்கும் என உறுதியளித்தனர்.
இந்த கள விசாரணையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மேவை சண்முக ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி, எம்.குணசேகரன் ஓம லூர் தாலுகா செயலாளர் என். ஈஸ்வ ரன் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் வி. பெரியசாமி ஓமலூர் கட்சி தாலுகா குழு உறுப்பினர் தும்பிப்பாடி முருகன் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
அடுத்த கட்ட நடவடிக்கை
அடுத்த கட்ட நடவடிக்கையாக மாவட்ட ஆட்சித் தலைவர், காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்க வேண்டும். பொய் வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும். எரிக்கப்பட்ட கடைக்கு தமிழக அரசு நிவாரணம் தர வேண்டும். காலங்காலமான வழிபாட்டு உரிமையை தர வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக அடுத்த கட்ட நடவடிக்கைக்கு திட்ட மிடப்பட்டிருக்கிறது என கட்சியின் சேலம் மாவட்ட குழு சார்பில் கட்சியின் மாவட்டச் செயலாளர் மேவை. சண்முகராஜா கூறியுள்ளார்.