districts

img

சேலம்:சாயப்பட்டறை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

சேலம் அருகே சாயப்பட்டறை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே உள்ள காளிகவுண்டம்பாளையம் பகுதியில் விளைநிலங்கள் அதிகமுள்ள இடத்தில் சாயப்பட்டறை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா பேராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அரசு அதிகாரிகள் சாயப்பட்டறை அமைக்க அனுமதிக்கப்படாது என உத்தரவாதம் அளித்ததை  தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சாயப்பட்டறை தொடர்பாக கடந்த மாதம் 25 ஆம் தேதியும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதும் அதிகாரிகள் சாயப்பட்டறை அமைக்கப்படாது என உறுதியளித்துள்ளனர். அதிகாரிகள் கொடுத்த உத்தரவையும் மீறி செயல்பட்டதால் பொதுமக்கள் இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

;