districts

img

சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டம்

சேலம்,ஜூலை 17- பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம் மக்கள் மீது தொடர் தாக்கு தல் நடைபெற்று வருவதை கண்டித்து, சேலம் கோட்டை மைதானத்தில் தமிழ் நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒன்றியத்தில் மூன்றாவது முறை யாக மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம் மக்கள் மீதான தொடர் தாக்குதல் நடைபெற்று வருகி றது. மத்திய பிரதேசம் மண்டனாவில் குளிர்சாதன பெட்டியில் மாட்டு இறைச்சி இருப்பதாக கூறி, 19 முஸ்லிம் வீடுகளின் மீது புல்டோசர் இயந்தி ரத்தை பயன்படுத்தி இடித்து தகர்க்கப் பட்டுள்ளது. இதேபோன்று, இமாச்சல பிரதேசம் நாகன் பகுதியில் முஸ்லிம் கடைகள் இடித்து தள்ளப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் முஸ்லிம் மக்களுக்கு வீடுகள் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் எருமை மாடுகள் வளர்ப் புக்காக வாங்கி வந்த மூன்று முஸ்லிம் இளைஞர்கள் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது போன்றே தில்லை, லக்னோ உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முஸ்லிம் மக்கள் மீது தொடர் தாக்குதல் நடைபெற்று வருகி றது. வகுப்புவாத வெறியை கிளரிவிட்டு திட்டமிட்டு நடைபெறும் இத்தகைய தாக்குதல்களை ஒன்றிய அரசு தடுத்த நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி தமி ழகம் முழுவதும், தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட் டத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தது. இதன்ஒருபகுதியாக சேலத்தில் புத னன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு அமைப்பின் சேலம் மாவட்ட தலைவர் ஆர். வெங்கடாபதி ஆர்ப்பா ட்டத்திற்கு தலைமை ஏற்றார். இதில், அமைப்பின் நிர்வாகிகள் ஐ.ஞான சௌந்தரி, ஜே.ஷேக் அப்துல்லா, எஸ்.எம்.தேவி, எம்.குணசேகரன், பி.ராமமூர்த்தி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதில், திரளானோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.