districts

img

சேலம் வந்தது கொரோனா தடுப்பூசி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

சேலம், ஜன.13- கொரோனா நோய்த்தொற்றை தடுக்க கண்டுபிடிக் கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசி மருந்து சென்னையில் இருந்து செவ்வாயன்று சேலம் கொண்டு வரப்பட்டது.  இதனை சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து அவர் கூறுகையில், குளிர்பதன வாகனத்தில் கொண்டு வரப்பட்ட கோவேக்சின் தடுப்பூசி மருந்துகள்,  மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலக வளா கத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள குளிர்பதன கிடங்கில் வைக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள நாளில் தடுப்பூசி முதல் கட்டமாக சேலம்  மாவட்ட மருத்துவர்கள், செவிலியர்களுக்கு செலுத்தப் படும் எனத் தெரிவித்தார்.

;