districts

சேலம்: மாநில அளவிலான கைபந்து போட்டி துவக்கம்

சேலம், ஜன.23- குடியரசு தின விழாவை முன்னிட்டு சேலம் மாநகர காவல் துறை சார்பில் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி சனியன்று துவங்கியது.

லைன்மேடு பகு தியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் துவங்கி நான்கு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் தமிழகத்தின் பல் வேறு மாவட்டங்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட ஆண் - பெண் அணிகள் பங்கேற்றுள்ளனர்.  இந்தப் போட்டியை சேலம் மாநகர காவல் ஆணை யாளர் செந்தில்குமார் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் துணை காவல் ஆணையாளர்கள் செந்தில், சந்திரசேகரன் மற்றும் தமிழ்நாடு வாலிபால் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நாக் அவுட் முறையில் நடைபெறும் இப் போட்டிகள், குடியரசு தினவிழா அன்று நிறைவுபெற்று பரிச ளிப்பு விழா நடைபெறுகிறது.

;