districts

சாலையை சீரமைக்க வலியுறுத்தி மறியல்

சேலம், மார்ச் 1- ஆத்தூர் அருகே சேதமைந்து காணப் படும் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் சாலை மறிய லில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள பைத்தூர் ஊராட்சி, 1 ஆவது வார்டுக்குட்பட்ட அண்ணா குட்டை பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு பிர தானத் தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள சாலை கடுமையாக சேதமடைந்து காணப்படுவதால், விவசாய நிலத்தில் விளை யும் பொருட்களை கொண்டு செல்ல முடி யாமலும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  சைக்கிள், இருசக்கர வாகனத்தில் செல் வோர் கீழே விழுந்து காயமடைந்து வருகின்ற னர். மேலும், இப்பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யததால், பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனி டையே, கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு, தோண்டி போடப்பட்ட அந்த சாலையில், ஜல் லிக்கற்களை கொட்டி வைத்தும், சாலை சீர மைக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து பல முறை அரசு அதிகாரியிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி யைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக் கள் அவ்வழியாக செல்லும் அரசு பேருந்து களை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த ஆத்தூர் ஊரக போலீசார், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் போராட்டக்காரர்கள் மறியலை  கைவிட்டு, கலைந்து சென்றனர்.