சேலம், டிச 05- குடியிருப்பு பகுதியில் தேங்கிய கழிவுநீரை அகற்றாமல் அலட்சியப் படுத்துவதாக குற்றம்சாட்டி சேலம், எரு மபாளையம் பஞ்சாயத்து அலுவல கத்தை வியாழன்று பொதுமக்கள் முற்று கையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டத.
மழையின் காரணமாக சேலம் மாவட்டம் எருமபாளையம் பஞ்சாயத்து ஏழாவது வார்டுக்கு உட்பட்ட ஆல மரத்து காடு பகுதியில் கழிவுநீர் தேங்கி யது. மூன்று நாட்களாகியும் இது வரை பஞ்சாயத்து நிர்வாகம் மழை நீரை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. பலமுறை ஊராட்சி நிர்வாகத் திடம் பொதுமக்கள் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண் டித்து பொதுமக்கள் சார்பில் எருமா பாளையம் ஊராட்சியை முற்றுகை யிட்டு மனு அளித்தனர்.