சேலம், செப்.18- அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலப் பேரவை திருவாரூரில் அக்டோபர் 16 ஆம் தேதியன்று நடைபெறுகிறது என்று சங்கத்தின் மாநில செயற்குழு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் சங்கத்தின் மாநிலத்தலைவர் என்.எல். ஸ்ரீதரன் தலைமையில் செவ்வாயன்று நடைபெற்றது. சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.கிருஷ்ண மூர்த்தி, பொருளாளர் ஜெயச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
“தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதி யர்களின் வாழ்வாதார கோரிக்கைகள் அனைத்தும், அக்டோபர் 16 ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் நடை பெற உள்ள மாநில பேரவையில் தீர்மானம் நிறை வேற்றப்பட உள்ளது. அந்த பேரவையில் மாநிலம் முழுவதுமிருந்து 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.