districts

img

நிரம்பும் நிலையில் மேட்டூர் அணை: அதிகாரிகள் ஆய்வு

சேலம், டிச.6- மேட்டூர் அணை விரைவில் முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலை யில், அதிகாரிகள் வெள்ளியன்று ஆய்வு செய்தனர். காவிரியின் நீர்பிடிப்புப் பகுதி களில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக சேலம்  மாவட்டம், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது.

நீர் வரத்து கணிசமாக இருக்கும் நிலை யில், அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர், பாசனத்திற்காக திறக்கப்பட்டு வருகிறது. பாசனத் திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதன் காரண மாக 120 அடி உயரம் கொண்ட  மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளியன்று காலை நிலவரப் படி 115.32 அடியாக உயர்ந்து காணப் பட்டது. நீர்வரத்தும், திறப்பும் இதே  நிலையில் நீடித்தால் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் நிலை யில் மேட்டூர் அணை உள்ளது. இந் நிலையில், திருச்சி மண்டல நீர் வளத்துறை தலைமை பொறியா ளர் தயாளகுமார் தலைமையிலான அதிகாரிகள், வெள்ளியன்று மேட் டூர் அணை அணையின் வலது கரை,  இடது கரை ஆகிய பகுதிகளை  பார்வையிட்டு ஆய்வு சுரங்கத்தி லும் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து நீர்வளத் துறையின் சேலம் கண்காணிப்பு பொறியா ளர் சிவகுமார், மேட்டூர் செயற் பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர்கள் செல்வராஜ் மதுசூதனன் ஆகியோ ருடன் ஆலோசனை மேற்கொண் டார். அணை நிரம்பினால் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் குறித்து ஆலோசிக்கப் பட்டுள்ளது. அணையின் வலது கரையிலும் இடது கரையிலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணியில் ஈடு படவும் உபரி நீரை திறக்க தயார் நிலையில் குழுக்களை நிறுத்தவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட் டுள்ளது. மேட்டூர் நீர்த்தேக்க பகுதி யில் படர்ந்து வரும் பச்சை நிற படலங்களை நிரந்தரமாக தடுக்க வும், மேட்டூர் அணை பூங்காவை  பராமரிக்கவும் நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என தலைமை பொறியாளர் தயாளகுமார் தெரி வித்துள்ளார்.