சேலம், மார்ச் 31 - திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சேலம் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் மலை யரசன் ஆகியோருக்கு வாக்கு கேட்டு சேலம் மாவட்டம் பெத்த நாயக்கன்பாளையத்தில் மார்ச் 30 சனிக்கிழமை மாலை நடைபெற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் பகுதிகள் வருமாறு:
தூக்கத்தை தொலைத்த மோடி
உச்சநீதிமன்றத்தால் வெளி வந்துள்ள தேர்தல் பத்திர ஊழலால் மோடி தூக்கத்தைத் தொலைத்துள் ளார்!
அதுமட்டுமல்ல, இன்னொரு முக்கிய காரணம் இருக்கிறது… அது தான் பிரதமர் மோடிக்கு ஒன்றிய உளவுத்துறை கொடுத்திருக்கும் “ரிப்போர்ட்” என்று ஒரு செய்தி வரு கிறது… அந்தச் செய்தி என்ன? ”தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு வரைக்கும் தென் மாநிலங் களில் பா.ஜ.க. வெற்றி பெற முடி யாது என்பதுதான் நிலைமையாக இருந்தது! தேர்தல் பத்திர ஊழல் வெளிவந்த பிறகு, வட மாநிலங் களிலும் பா.ஜ.க. வெற்றி பெறாது என்பதுதான் உண்மையான நிலை மையாக இருக்கிறது!” என்று உள வுத்துறை ரிப்போர்ட் சொல்லி யிருக்கிறது!
இதனாலேயும், பிரதமர் மோடி தூக்கத்தைத் தொலைத்துவிட்டுப் பதற்றப்படுகிறார்! பதற்றத்தில் என்ன என்ன செய்கிறார்? ஜார்க் கண்ட் மாநிலத்தின் பழங்குடியின முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அவர்களையும், தில்லியில் மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரி வால் அவர்களையும் - அமலாக்கப் பிரிவை ஏவிவிட்டு, கைது செய்கிறா ர்கள்! காங்கிரஸ் கட்சிக்கும், கம்யூ னிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்து றையை ஏவி விட்டு, நோட்டீஸ் விடு கிறார்! எதிர்க்கட்சி எம்.பிக்கள் எதிர்த்துப் பேசினால், சி.பி.ஐ ரெய்டு விடுகிறார்! ஒருசில பத்திரிகைகள் இதைப் பற்றி விமர்சிக்கிறார்கள்! ஆனால் எதற்கும் பதில் இல்லை! தேர்தல் நேரத்தில், பா.ஜ.க.வின் கூட்டணி கட்சிகளைப் போல், அமலாக்கப்பிரிவு - சிபிஐ - ஐடி ஆகியவற்றைப் பிரதமர் பயன் படுத்துகிறார் என்றால், உச்சக்கட்ட தோல்வி பயத்தில் இருக்கிறார் என்று அர்த்தம்!
பாஜகவினர் போட்டியிடாமல் பின்வாங்குவது ஏன்?
எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்ற வெறியில், பல தியா கங்களால் உருவான இந்திய ஜனநாயகத்தையே சீரழித்துவிட்டு இருக்கிறார். இதனால் ஒட்டு மொத்த இந்திய மக்களும் பா.ஜ.க. வின் சர்வாதிகாரப் போக்கின் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அதனால்தான் இந்த நாட்டின் நிதி யமைச்சர் உட்பட முன்னணி பா.ஜ.க.வினரும் தேர்தலில் போட்டி யிடாமல் பின்வாங்குகிறார்கள்.
இங்கு தமிழ்நாட்டில் அதை விடப் பரிதாபமாக இருக்கிறது பா.ஜ.க… ஒரு காமெடி வரும் ஞாபகம் இருக்கிறதா! “பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக்கு” என்று… அதுபோல, தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர் கிடைக்காமல் - கவர்னர் – சிட்டிங் எம்.எல்.ஏ. என்று அழைத்து நிறுத்தி, செய்தியில் இருக்க வேண்டும் என்று பார்க்கிறார்கள்… இதிலிருந்து என்ன தெரிகிறது? பா.ஜ.க.வுக்கு இருக்கும் பயமெல்லாம், நோட்டா வைவிடக் கீழே சென்றுவிடாமல் டெபாசிட்டாவது வாங்க வேண்டும் என்ற முயற்சிதான் நன்றாகத் தெரிகிறது!
பெண் சக்தி பற்றிப் பேச அருகதை உள்ளதா?
பெண் சக்தியைப் பற்றி மோடி சேலத்தில் பேசியிருந்தார்… உண்மையில், பா.ஜ.க. ஆட்சியில் பெண்களின் நிலைமை என்ன?
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக காங்கிரஸ் கொண்டு வந்த நிர்பயா நிதியை முறையாக ஒதுக்காமல் விட்டது பா.ஜ.க. ஆட்சி தான்.
பா.ஜ.க. எம்.பி.யால் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத் தலுக்கு உள்ளானது, அவர்கள் போராடியது எல்லாமே பா.ஜ.க. ஆட்சியில்தான்!
குஜராத்தில் பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது, மோடி ஆட்சியில் தான்! மணிப்பூரில் பெண்கள் என்ன என்ன கொடுமைகளுக்கு ஆளாகி னார்கள் என்று நம்முடைய எம்.பி.க்கள் குழு சென்று பார்த்து வந்து கதறினார்களே…
அந்த கொடுமை களை எல்லாம் இரக்கமில்லாமல் வேடிக்கை பார்த்தது மோடி ஆட்சிதான்! ஜம்மு - காஷ்மீரில், 8 வயதுக் குழந்தையை பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கிய குற்ற வாளிக்கு ஆதரவாக இரண்டு பா.ஜ.க. அமைச்சர்கள் ஊர்வலம் சென்றார்களே? உத்தரப்பிரதேசத்தில் வேலை கேட்டுச் சென்ற இளம்பெண்ணை, பா.ஜ.க. எம்.எல்.ஏ குல்தீப் சிங்கும் அவரின் சகோதரரும், நண்பர் களும் சேர்ந்து கும்பல் பாலியல் வல்லுறவு செய்தார்களே?
அது மட்டுமா, அந்தப் பெண்ணின் தந்தை யை அநியாயமாகச் சிறையிலேயே வைத்து கொன்றார்களே? பாலியல் வல்லுறவுக்கு உள்ளான ஒரு பெண்ணை நீதிமன்றத்திற்குச் செல்லும் வழியிலேயே உயிருடன் கொளுத்தினார்களே? அதுவும் பா.ஜ.க. ஆட்சியில்தான்! இந்தச் செய்திகளுக்கு எல்லாம் பிரதமரிடம் இருந்து பதில் வந்திருக்கிறதா?
வருத்தப்படு கிறேன் என்று பெயரளவுக்காவது சொல்லியிருக்கிறார்களா? இந்த இலட்சணத்தில் பெண் சக்தி என்று பேசுவதற்கு உங்களு க்கும் – பா.ஜ.க. ஆட்சிக்கும் என்ன தகுதி இருக்கிறது? என்ன அரு கதை இருக்கிறது?
பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் போன்று, சட்டம்-ஒழுங்கு சீர்குலை யாமல் சமூக நல்லிணக்கத்துடன் மக்கள் வாழும் அமைதியான தமிழ்நாட்டை உங்களுக்குப் பிடிக்க வில்லையா? என் கையில் ஒரு பட்டியல் இருக்கிறது… இதில் இருக்கும் பெயர் பட்டியல் ஏதோ தேசத் தலை வர்களோ… சமூகச் சேவகர்களோ இல்லை… எல்லோரும் சட்டம்–ஒழுங்கைக் கெடுக்கும் ரவுடிகள்! காவல்நிலைய குற்றப்பதிவேட்டில் உள்ள குற்றவாளிகள்! ஆனால் இந்தப் பட்டியலில் இருப்பவர்கள் எல்லாம், இப்போது எங்கு இருக்கிறார்கள் தெரியுமா? அத்தனை பேரும் பா.ஜ.க.வில்தான் இருக்கிறார்கள்! வழக்கமாக இந்த பட்டியல் காவல் நிலையத்தில்தான் ஒட்டப்பட்டிருக்கும்…
32 பக்கங்கள் கொண்ட இந்தப் பட்டியலில், 1977 வழக்குகள் இருக்கும் 261 ரவுடிகள் இருக்கிறார்கள். இவர்களின் பெயர் என்ன? பா.ஜ.க.வில் என்ன பொறுப்பில் இருக்கிறார்கள்? இவர்கள் மேல் என்ன என்ன பிரிவுகளில் வழக்குகள் இருக்கிறது? என்று இந்தப் பட்டியலில் இருக்கிறது. எல்லா ரவுடிகளையும் உங்கள் கட்சியில் வைத்துக்கொண்டு சட்டம் ஒழுங்கைப் பற்றி நீங்கள் பேசலாமா? உங்களிடம் இருக்கும் உளவுத்துறை மூலமாக அந்தப் புத்தகத்தை வாங்கிச் சரிபார்த்துவிட்டு அதற்குப் பிறகு எங்களைப் பற்றி பேசுங்கள் பிரதமர் அவர்களே…
போதை... டாப் 10-ல் 7 பாஜக மாநிலங்கள் தானே!
அடுத்து, போதைப் பொருட்கள் பற்றியும் பேசியிருக் கிறார். தி.மு.க.வில் இருந்த ஒருவர் மேல் இது தொடர்பாகக் குற்றச்சாட்டு எழுந்ததுமே, அந்த நபரை அடுத்த விநாடியே கட்சியை விட்டு நீக்கிவிட்டோம். அவர் மீதான விசாரணைக்கு நாங்கள் தடையாக இல்லை… இந்த வழக்கை வைத்து, தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பது போன்று அவதூறு பரப்புரை செய்கிறார். இது, அவர் இப்போது வகிக்கும் பிரதமர் பதவிக்கு அழகல்ல!
இந்தியாவிற்கே போதைப் பொருள் குஜராத் துறை முகத்தில் இருந்துதான் வருகிறது என்று பிடிக்கிறார்கள்… ஒரு காலத்தில் குஜராத் முதலமைச்சராக இருந்ததே நீங்கள்தானே? இப்போதும் உங்கள் கட்சிதானே அங்கு ஆட்சியில் இருக்கிறது?… இது பற்றியாவது வாய் திறப்பீர்களா?
போதைப் பொருள் அதிகமாக கைப்பற்றப்பட்ட ‘டாப் 10’ மாநிலங்களில் ஏழு மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி தான் நடக்கிறது! இந்தப் பத்து மாநிலங்களில் ‘தமிழ்நாடு’ என்ற பெயரே இல்லை!