சேலம், ஜூன் 10- தனக்கு சொந்தமான நிலத்தை அபகரித் துக் கொண்டு அடித்து வெளியேற்றிய மகன் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சேலம் ஆட்சியர் அலுவல கம் முன்பு விவசாயி தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின் னப்பன் (82). மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திற்கு திங்களன்று வந்த இவர், தன் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தலையில் ஊற்ற முயற்சி செய்தார். இதனை கவனித்த, அங்கு பாது காப்பு பணியில் இருந்த காவல் துறையினர் தடுத்து நிறுத்தி, சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து சின்னப்பன் கூறுகை யில், நான், எனது மனைவி வள்ளியம்மாள் ஆகியோர் எனது மகன்கள் வீட்டில் வசித்து வருகிறோம். அதேபகுதியில் நான் சம்பா தித்து ஏழரை ஏக்கர் நிலத்தை வாங்கி, அதில் விவசாயம் செய்து வந்தேன். இந்நிலையில், எனது மகன்கள் மற்றும் எனது மனைவி வள்ளி யம்மாள் ஆகியோர், என்னிடமிருந்து எனக் குத் தெரியாமலேயே ஏழரை ஏக்கர் நிலத்தை பறித்துக் கொண்டனர். இதுகுறித்து கேட்ட போது, அடித்து துன்புறுத்தி என்னை வீட்டை விட்டு வெளியேற்றி, கொலை மிரட்டல் விடு கின்றனர். நான் தற்போது வாழ வழியில்லா மல் தவித்து வருகிறேன். எனவே, இதுகு றித்து உரிய நடவடிக்கை எடுத்து, என்னிடமி ருந்து அபகரித்த நிலத்தை மீட்டுத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.