சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகளை கைது செய்ததை கண்டித்து சேலத்தில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் செல்வகுமார், அமராவதி, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ், தலைவர் ந.திருவரங்கன், சுசீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.