சேலம், ஜூலை 19- பிஎஸ்என்எல் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் வெள்ளியன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.து.
தருமபுரி மாவட்டத்தில் நான்கு தொலைபேசி நிலையங்களில் இருந்து, நூற்றுக்கணக்கான விலை உயர்ந்த மரங்கள், எந்த வொரு கணக்கும் இல்லாமல், வனத்துறையினர் அனுமதி பெறா மல், வெட்டி எடுத்து கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதேபோல், திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொலைபேசி நிலையத்திலிருந்து இலாக்காவிற்கு சொந்தமான பொருட் கள் கடத்தப்பட்டுள்ளன. கிட்டத் தட்ட மாநிலம் முழுவதும் இதே நிலை தான் உள்ளது. ஊழியர் பற் றாக்குறை காரணமாகவும், தரை வழி தொலைபேசி இணைப்பகங் கள், காப்பர் கேபிள் இணைப்பகங் களாக மாற்றப்படுவதாலும், பல தொலைபேசி நிலையங்களில் காவலர்கள் கூட இல்லாததாலும், சில சமூக விரோதிகள், நிலை மையை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தி, மக்கள் சொத்துகளை கள வாடி வருகின்றனர். இதுகுறித்து நிர்வாகமும் முறையான நடவ டிக்கை எதுவும் எடுக்காமல் சுணக்க மாக இருந்து வருகிறது. புகார் கொடுக்கும் தொழிற்சங்க தலைவர் கள் மீது நடவடிக்கை எடுக்கும் போக்கினை நிர்வாகம் மேற்கொள் கிறது. இத்தகைய போக்கை நிர்வா கம் கைவிட்டு, பிஎஸ்என்எல் சொத் துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் வெள்ளியன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், ஏஐபிடிபிஏடி என்டிசிடபிள்யுயு ஆகிய மூன்று சங்கங்களின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், கிளைச் செய லாளர்கள், முன்னணி ஊழியர்கள் சேலம் மாவட்டம் முழுவதும் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் பிஎஸ் என்எல் பொது மேலாளர் அலுவல கம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங் கத்தின் மாவட்டத் தலைவர் அதிகா ரம் ராஜன் மதியழகன் தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாவட் டச் செயலாளர் இ.கோபால், ஒருங் கிணைப்புக்குழு நிர்வாகிகள் பழனி, ரமேஷ், செல்வம், தமிழ்மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தருமபுரி
தருமபுரி பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம் முன்பு பிஎஸ் என்எல் ஓய்வுபெற்றார் அமைப்பின் மாவட்டச் செயலாளர் டி.பாஸ் கரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ஏ.பாபு ராதாகிருஷ்ணன், மாநில உதவிச்செயலாளர் எம்.பாபு, மாவட்டச் செயலாளர் பி.கிருஷ் ணன், அகில இந்திய உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் ஜி.உமாராணி, அதி காரிகள் சங்க மாவட்டச் செயலா ளர் பி.பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஓய்வுபெற் றோர் அமைப்பின் மாவட்ட உதவிச் செயலாளர் ஆர்.பழனி நன்றி கூறி னார்.