ராணிப்பேட்டை,அக்.23- ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், காட்டுப்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல் நடத்தக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லூரி முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டது. சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பா. பாஸ்கர் தலைமையில் செவ்வாயன்று (அக். 22) அளிக்கப்பட்ட மனுவில், கல்வி வளாகம் என்பது இந்தியாவின் எதிர்கால பயிற்சி பட்டவை என நாட்டின் முதல் கல்விக் கொள்கையை வகுத்த கோத்தாரி கமிஷன் கூறியது. கலை, விளையாட்டு மற்றும் பொதுநலம் சார்ந்த கூட்டு செயல்பாடுகளில் பங்கேற்காத சூழலை ஏற்படுத்தி இருக்கிறது. தலைமைத்துவ பண்பு மாணவர்களிடையே வளர்க்கப்படாததால் போதை, வன்முறை கலாச் சாரத்திற்கு அடிமையாகி வாழ்க்கை பாழாக்க கின்ற னர். மேலும் சமீப காலமாக மாணவர், ஆசிரியர் உறவு மோசமடைந்து வரு கிறது. இந்நிலையில் கல்வி வளாகங்களில் மாண வர்கள் பங்கேற்பு ஊக்கு விப்பதற்கும், தலைமை பண்பை வளர்த்து அவர்களை செழுமை படுத்துவதற்கும் மாணவர் பேரவை தேர்தல் என்பது அவசியம் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.