சேலம், ஜூலை 16– நலவாரியத்தில் நடைபெறும் குளறு படிகளை சீர் செய்ய வேண்டும், 74 லட்சம் முறைசாரா தொழிலாளர்களின் ஆன்லைன் தரவுகள் காணாமல் போன சம்பவத்தில், பொறுப்பில்லாத பதில் களை கூறும் அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு முழுவதும் செவ்வாயன்று சிஐடியு போராட்ட இயக்கத்தில் ஈடுபட்டனர்.
நலவாரியத்தில் பதிவு செய்த அனைத்து தொழிலாளருக்கும் பணப்ப லன்களை வழங்க வேண்டும். ஓய்வூ தியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். பெண்களுக்கு 55 வயது கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும். சேலம் மாவட்ட நலவாரிய அலுவலகங்களில் தேங்கியுள்ள அனைத்து உதவி நிதிகளையும் உடனடி யாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாவட்டக்குழு சார்பில், சேலம் கட்டுமான நலவாரிய அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடை பெற்றது.
இதில் சிஐடியு சாலைப்போக்கு வரத்து தொழிலாளர் சங்க மாநிலத் துணைத்தலைவர் எஸ்.கே.தியாகரா ஜன், சிஐடியு மாவட்டத் தலைவர் டி.உத யகுமார், மாவட்டச் செயலாளர் ஏ.கோ விந்தன், மாவட்டப் பொருளாளர் இளங்கோ, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, கட்டுமான தொழி லாளர் சங்க செயலாளர் சி.கருப்பண் ணன், தலைவர் மோகன், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் பி.பன்னீர்செல் வம், சுரேஷ்குமார், ஆர்.கிருஷ்ண மூர்த்தி, செம்பன், விஜயலட்சுமி உட்பட 800க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர்.
தருமபுரி
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சிஐடியு மாநிலக்குழு உறுப்பி னர் ஜி.நாகராஜன் தலைமை வகித்தார். இதில் மாநிலச் செயலாளர் சி.நாகரா சன், மாவட்டச் செயலாளர் பி.ஜீவா, மாவட்ட நிர்வாகிகள் எஸ்.சண்முகம், சி.ரகுபதி, சி.அங்கம்மாள், ஆணஸ்ட் ராஜ் உட்பட திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
கோவை
கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகே நடைபெற்ற சிஐடியு ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் கே.மனோகரன் தலைமை ஏற்றார். இதில், சிஐடியு கோவை மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொரு ளாளர் ஆர்.வேலுசாமி மற்றும் நிர்வா கிகள் ஆர்.ராஜன், பி.சந்திரன், ரத்தின குமார், சந்தோஷ் குமார், நவநீதகி ருஷ்ணன், ராஜகோபால், ஏழுமலை உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
ஈரோடு
நல வாரிய முறைகேடுகளை கண்டித்து இந்திய தொழிற்சங்க மையத்தின் சார்பில் ஈரோடு தொழிலா ளர் நல வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியு சாலை போக்குவரத்து தொழி லாளர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் பி.கனகராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், செயலாளர் எச்.ஸ்ரீராம், ஈரோடு பொது தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.கி ருஷ்ணன், பவானி பொதுத் தொழிலா ளர் சங்கத்தின் தலைவர் ஏ.ஜெகநா தன், ஆட்டோ தொழிலாளர் சங்க செய லாளர் கண்மணி, கட்டுமான சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.மாதவன், சுமை பணியாளர் சங்கத் செயலாளர் பிரபு உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற சிஐடியு ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மாவட்ட தலைவர் சி.மூர்த்தி தலைமை ஏற்றார். இதில், திரளானோர் பங்கேற்றனர்.