புதுச்சேரி,ஜன.30- புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித் துறை சார்பில் தடகள போட்டிகள் நடந்தது. இதில் 8 மண்டலங்களை சேர்ந்த அரசு, தனியார் பள்ளி மாண வர்கள் 648 பேர் பங்கேற்றனர். குண்டு எறிதலில் 14 வயது பிரிவில் காரைக்கால் நிர்மலாராணி மகளிர் பள்ளி மாணவி ஜனனிகா, 19 வயது பிரிவில் கண்ணகி அரசு பெண்கள் பள்ளி மாணவி லொகிதா சாதனை படைத்தனர். 19 வயது பிரிவில் தவளகுப்பம் அரசு பள்ளி மாணவி கோபிகா வட்டு எறிதல், காரைக்கால் நிர்மலா ராணி பள்ளி மாணவி ஹரிபிரியா நீளம்தாண்டுதலில் சாதனை படைத்தனர். 17 வயது பிரிவு ஓட்டத்தில், ஓதியம் பட்டு குளூனி பள்ளி மாணவி மதுமிதா, 14 வயது பிரிவில் பாகூர் ஆல்பா பள்ளி மாணவி ஆர்த்திகா ஈட்டி எறிதலில் சாதனை படைத்தனர். இதன் பரிசளிப்பு விழா, கோரி மேட்டில் நடந்தது. பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ருத்ரகவுடு தலைமை வகித்தார். முதலமைச்சர் ரங்கசாமி போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசு கையில், “மாணவர்கள் எதை படிக்க வேண்டும் என விரும்புகிறார்களோ அதை கொண்டுவருவதுதான் அரசின் எண்ணம். இதற்கான செயல் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறோம்”என்றார். தனியார் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்குகிறோம். நன்றாக படித்தால் நல்ல சிந்தனைகள் வளரும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதத்திற்குள் சீருடை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.