சேலம், டிச. 5- ஃபெஞ்சால் புயல் காரணமாக சேலம் திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால், பள்ளி, மருத்துவமனை உள் ளிட்ட அடிப்படைத் தேவை கூட செல்ல முடி யாமல் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
ஃபெஞ்சால் புயல் காரணமாக ஏற்காடு பகுதியில் பெய்த கன மழை பெய்தது. இதன் காரணமாக திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், சேலம் அயோத்தி யபட்டினம் ஒன்றியத்துக்கு உட்பட்ட எம். பாலப்பட்டி கோரத்துப்பட்டிக்கு இடையே உள்ள தரைப்பாலம் அடித்து செல்லப்பட் டது. எம்.பாலப்பட்டி பகுதியில் இருந்து கோரத்துப்பட்டி, வீராணம், பெருமா பாளை யம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியா மல் பொதுமக்கள் கடும் அவதியடைந்து உள் ளனர். அதேபோன்று கோராத்தப்பட்டி பகுதி யில் இருந்து எம்.பலப்பட்டிக்கு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை, அரசு பள்ளி, ரேஷன் கடை உள்ளிட்ட அடிப்படை வசதிக்கு கூட செல்ல முடியாமல் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றி வரக்கூடிய சூழல் உள்ளது. மேலும், என்பாளப்பட்டி பகுதியில் இருந்து கோரத் துப்பட்டி வழியாக அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் அரசு பள்ளி மாணவர்கள் செல்ல முடியாமல் 10 கிலோமீட்டர் செல் லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிக்கு வந்து தற்காலிக நடவடிக்கை கூட மேற் கொள்ளவில்லை என இப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு கின்றனர்.
நாமக்கல்
இதேபோன்று, நாமக்கல் மாவட்டம் பர மத்தி வேலூர் திருமணிமுத்தாற்றில் 6000 கன அடி தண்ணீர் செல்வதால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 15-க்கும் மேற் பட்ட இடங்களில் தரைப்பாலங்கள் மூழ்கியுள் ளன. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள் ளது.
இந்நிலையில் பரமத்தி வேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் குப் பிச்சிபாளையம் இடும்பன் குளம் அருகே செல்லும் திருமணிமுத்தாற்றில் வெள்ளம் பாலத்தை மூழ்கி செல்லும் நிலையில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் செல்பி எடுத்து செல்கின்றனர். அதேபோல் காந்தி நகர், இலங்கை அகதிகள் முகாம் பகுதி யில் உள்ள 140-க்கும் மேற்பட்ட வீடுகள் தண் ணீரில் மூழ்கும் நிலை உள்ளதால் அதிகாரி கள் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.