districts

சிறுத்தை பிடிபடாததால் சத்தி திரும்பிய தனிப்படை

சேலம், ஜூன் 12- ஓமலூர் அருகே பதுங்கியுள்ள சிறுத்தை யைப் பிடிக்க வந்த சத்தியமங்கலம் தனிப் படையினர், சிறுத்தை கூண்டில் சிக்காததால் மீண்டும் சத்தியமங்கலம் திரும்பியுள்ளனர்.

சேலம் மாவட்டம், டேனிஷ்பேட்டை வனச் சரகத்திற்குட்பட்ட காப்புக்காடுகளையொட்டி யுள்ள பகுதிகளில், அடையாளம் தெரியாத விலங்கு ஒன்று, கால்நடைகளை வேட்டை யாடி வந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு, காடையாம்பட்டி வட்டம், காருவள்ளி கோம்பை காட்டில் விவசாயி சீனிவாசனுக்கு  சொந்தமான பசு மாட்டை வேட்டையாடிக் கொன்றது. அப்போது வனத்துறை வைத்தி ருந்த கண்காணிப்பு கேமராவில் அந்த விலங்கு சிறுத்தைதான் என்பது பதிவானது. அதைத்தொடர்ந்து டேனிஷ்பேட்டை வனத் துறையினர் சிறுத்தையைப் பிடிக்க ஆங் காங்கே கூண்டுகள் வைத்தனர். வனச்சரகர் தங்கராஜ் தலைமையில் வனத்துறையினர், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனி டையே சத்தியமங்கலம் புலிகள் காப்பகத் தில் இருந்து சிறுத்தையைப் பிடிக்க பயிற்சி பெற்ற வனத்துறை அதிகாரிகளைக் கொண்ட  தனிப்படை அமைக்கப்பட்டது. அந்தத் தனிப் படை சிறுத்தை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட் டது. ஆனால், சிறுத்தை எந்தக் கூண்டிலும் சிக்கவில்லை. தனிப்படையினரின் கண்கா ணிப்பிலும் சிக்கவில்லை.

கடந்த ஒரு வாரமாக பல இடங்களில் தேடியும் சிறுத்தை எங்கும் தென்பட வில்லை. இதையடுத்து தனிப்படையினர், காருவள்ளியிலிருந்து சத்தியமங்கலத்திற்கு செவ்வாயன்று திரும்பிச் சென்றனர். மேச் சேரி, வெள்ளார் பகுதியில் ஏற்கெனவே சிறுத்தை நடமாட்டம் இருந்த பகுதியிலும் இரண்டு கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எலத்தூர் காப்புக்காடு, அடி வாரப் பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இரவில் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும், சிறு வர்கள், முதியோர்கள் வெளியே தூங்கக் கூடாது என்றும், காடையாம்பட்டி வருவாய்த் துறை, வனத்துறை அதிகாரிகள் எச்ச ரிக்கை விடுத்துள்ளனர்.