districts

108 ஆம்புலன்சில் பிரசவம் - மருத்துவ உதவியாளருக்கு பாராட்டு

இளம்பிள்ளை,ஜன.24- 108 ஆம்புலன்சில் பிரசவம் பார்த்து தாய் மற்றும் குழந் தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவ உதவியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.  

சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டி அருகே உள்ள வெள்ளாளபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி குமார் (26) இவரது மனைவி மஞ்சு (24). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த வியாழனன்று  மாலை  பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக் காக குடும்பத்தினர் அனுமதித்தனர் .

பின்னர், மேல்சிகிச் சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பிரசவ வலி அதிகமாக ஏற்பட்டுள்ளது.  அப்பொழுது 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாள ராக இருந்த ஜெகதீசன் மற்றும் ஓட்டுநர் ராஜலிங்கம் ஆகியோர் அவருக்கு பிரசவம் பார்த்தனர்.

பிரசவத்தில் மஞ்சு வுக்கு பெண் குழந்தை பிறந்தது. இபின்னர் தாயும், குழந்தை யும் பத்திரமாக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். இருவரும் தற்போது நலமாக உள்ளனர். இந்நிலை யில், பத்திரமாக பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர் களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

;