சென்னை, பிப். 14- திருவொற்றியூர் 4ஆவது வார்டில் புதைவட கேபிள் மூலம் மின் இணைப்பு வழங்கக் கோரி மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் மற்றும் கிராமத் தலைவர்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஜெ.ராதாகிருஷ்ணனை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், சென்னை மாநகராட்சி 4ஆவது வார்டு கிரிஜா நகர், திருவீதியம்மன் நகர், ஆதி திராவிடர் காலனி, கன்னிய லால் லேஅவுட், மகா லட்சுமி நகர், முல்லை நகர், ஜெய்ஹிந்த் நகர், ஜோதி நகர், சண்முகபுரம், வி.பி. நகர், டி.எஸ். கோபால் நகர், காமராஜ் நகர், மாகாளியம்மன் கோவில் நகர், எர்ணீஸ்வரர் நகர் மற்றும் 6ஆவது வார்டில் சார்லஸ் நகர் மின் இணைப்புகள் மேல்நிலை கம்பிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. நீண்ட காலத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட கம்பங்கள் சேதமடைந்துள்ளன. மின் மாற்றிகளும் பழுத டைந்துள்ளன. இதனால் மேலே செல்லும் கம்பிகள் அடிக்கடி அறுந்து விழுவ தால் விபத்துக்கள் ஏற்படு கிறது. மேலும் சாதாரண பராமரிப்பு பணிகளுக்கு கூட உதிரி பாகங்கள் இல்லாத தால் பல இடங்களில் பரா மரிப்பு பணி முறையாக நடைபெறாமல் உள்ளது. ஏற்கெனவே 2022இல் மேற்பார்வை பொறி யாளரை சந்தித்து இந்த கோரிக்கைகளை வலி யுறுத்தினோம். மீண்டும் 2023இல் தலைமை பொறி யாளரை சந்தித்து இந்த கோரிக்கைகளை வலி யுறுத்தினோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே வார்டு முழுவதும் மேல்நிலை கம்பி இணைப்புகளை அகற்றிவிட்டு புதைவட கேபிள் மூலம் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட இயக்குநர் ஜெ.ராதா கிருஷ்ணன் உரிய நட வடிக்கை எடுப்பதாக தெரி வித்தார். இதில் சிபிஎம் திரு வொற்றியூர் வடக்கு பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல் மற்றும் கே.வெங்கடையா, சதீஷ், குமார், கிரிஜா நகர் தலைவர் சுப்பிரமணி ஆகி யோர் கலந்து கொண்டனர்.