சென்னை, ஜன. 24- குழந்தைகளின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் புகைப்படக் கண்காட்சி சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் துவங்கியது. வியாழனன்று (ஜன.23) முறைப் படி இந்த கண்காட்சியை அருங்காட்சி யகங்கள் துறை இயக்குநர் கவிதா ராமு திறந்துவைத்தார். சென்னை புகைப்பட பைனாலே பதிப்பு 4 இன் இரண்டாம் கட்டத்தின் துவக்கத்தை குறிக்கும் வகையில் இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை போட்டோ பைனாலே மற்றும் குழந்தை கள் புகைப்படக் காப்பகம் (யுகே) ஆகி யவை ஏற்பாடு செய்துள்ள இந்த கண் காட்சி, உலகெங்கிலும் உள்ள குழந்தை களின் கலைஆர்வம், ஆவணப்படம், மற்றும் உள்ளூரில் புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றைக் கொண்டாடு கிறது. 20 சர்வதேச புகைப்படத் திட்டங் களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இந்த கண்காட்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அன்றாட வாழ்க்கை, உள்ளூர் சமூகங்கள் மற்றும் நிலப்பரப்புகளைப் படம்பிடிக்கும் வகையில் 3 முதல் 18 வயதுடைய குழந்தைகளின் படைப்புகள் இங்கு இடம்பெற்றுள்ளன. இந்தியா, இங்கிலாந்து, துருக்கி, பாலஸ்தீனம், குவாத்தமாலா, தென்னாப்பிரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் குழந்தைகள் எடுத்த புகைப் படங்கள் அழகாக காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. புகைப்படங்கள் மன தில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்தக் கூடிய ஒரு கருவியாகும். குழந்தை களின் கண்கள் மூலம் உலகை பார்ப்பது ஆகியவையும் இந்த கண்காட்சியின் முக்கிய அம்சமாகும். ஜன.23 அன்று துவங்கிய இந்த கண்காட்சி மார்ச் 16 வரை நடை பெறவுள்ளது. காலை 10:30 மணி முதல் மாலை 6:30 மணிவரை நடை பெறும். வெள்ளிக்கிழமை விடுமுறை. இந்தகண்காட்சியுடன் ‘Love and Light: A Site of Infinite Possibilities’ (அன்பு மற்றும் ஒளி: எல்லையற்ற சாத்தியக்கூறுகளின் தளம்) என்ற தலைப்பில் மற்றொரு புகைப்பட கண்காட்சியும் நடைபெற்று வரு கிறது. பிரபல புகைப்பட கலைஞர் சுனில் குப்தாவின் புகைப்படங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த இரண்டு கண் காட்சிகளும், புகைப்படம் எடுப்பதில் சிந்தனையைத் தூண்டுவதோடு படை ப்புகள் மற்றும் விமர்சனபூர்வமான விவாதங்களுக்கு வழிவகுக்கும் என்று கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித் தனர். (ந.நி)