இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஆர்.கே.நகர் நேரு நகர் கிளை சார்பில் நடைபெற்ற 2ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு 41ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர் பா.விமலா , மாவட்டத் தலைவர் எல்.பி.சரவணத்தமிழன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன், பகுதிச் செயலாளர் வெ.ரவிக்குமார் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதில் பகுதிச் செயலாளர் விஜயகுமார், தலைவர் கோபி, நிர்வாகிகள் கணேஷ், சேஷகிரி, விக்னேஷ், பிரபா, பரத், மஞ்சு, சீனா, திவாகர், தீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.