ராணிப்பேட்டை,செப். 30 - ராணிப்பேட்டை மாவட்டம், காரை கூட்ரோடு பகுதியிலுள்ள சிறு வர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சார்பில் மண்டல அளவி லான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திர கலா துவக்கி வைத்தார்.முன்னதாக, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து, ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தும், புறாக்களை பறக்க விட்டும் விளை யாட்டு போட்டிகளை கொடி யசைத்து தொடங்கி வைத்தும் மாணவர்களுடன் விளையாடினர். இப்போட்டிகளில் மொத்தம் 540 மாணவர்கள் பங்கேற்றனர்.இதில் மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலுவலர் அனுசியா, காரை குழந்தை கள் இல்ல கண்காணிப்பா ளர்கள் கோமதி, விஜய குமார், குழந்தை நல குழுமத் தலைவர் வேத நாயகம், மாவட்ட விளை யாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஞான சேகரன், சமூக ஆர்வலர் அக்பர் ஷெரிப் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.