districts

img

எங்கே எனது வேலை? வாலிபர் சங்க பிரச்சாரம் தொடக்கம்

சென்னை, செப். 17 - சமூக பாதுகாப்புடன் கூடிய நிரந்தர வேலை கேட்டு இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கம் பிரச்சார இயக்கத்தை தொடங்கி யுள்ளது. ஒன்றிய அரசின் காலிப் பணியிடங்களை யும், ரயில்வே துறையில் உள்ள 3 லட்சம் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம் முறையை ஒழிக்க வேண்டும், தனியார் துறையில் இடஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும், பொதுத் துறைகளை  பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்களன்று (செப்.17) எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில் பிரச்சார தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ் தலை மையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சென்னை மாநிலச் செயலாளர் ஸ்ரீதர சுப்பிரமணியம், மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் ச.ஆனந்தகுமார், வாலி பர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தீ.சந் துரு, மாநிலக்குழு உறுப்பினர் அ.ஜானகி தேவி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.மணிமாறன், மாவட்டக்குழு உறுப்பினர் வே.கார்த்திக் உள்ளிட்டோர் பேசினர்.