கள்ளக்குறிச்சி, டிச.15 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி உளுந்தூர்பேட்டை தொகுதி முழுவதும் மாவட்ட தலைவர் மு.சிவகுமார் தலைமையில் பைக் பைக் பிரச்சாரம் நடைபெற்றது, உளுந்தூர்பேட்டை பேருந்து நிலை யத்தில் துவங்கிய பிரச்சாரத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில இணைச் செயலாளர் செல்வராஜ் கொடியசைத்து துவங்கி வைத்தார். உளுந்தூர்பேட்டை நாராயணன் தியேட்டர் வழியாக மாடல் கிராமம், கீரனூர்,நாச்சியார் பேட்டை வழி யாக பூ.மாம்பாக்கம்,திருநாவலூர், கெடி லம்,பெரும்பட்டு கில்லனுர் களமருதூர், பிள்ளையார்குப்பம், வழியாக குன்னத்தூர் இறுதியாக எலவனாசூர்கோட்டை பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்டத்துடன் நிறைவடைந்தது. தோல் இல்லாத காலணி தொழிற்சாலை பணிகளை விரைந்து முடித்து இப்பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும், உளுந்தூர்பேட்டையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்து தரவேண்டும், உளுந்தூர் பேட்டை ரயில் நிலையத்தில் வைகை, பல்லவன்,குருவாயூர் ஆகிய அதி வேக விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் உளுந்தூர் பேட்டை முதல் கள்ளக்குறிச்சி வரை புதிய ரயில் பாதை அமைத்து தர வேண்டும், தலைமை மருத்துவமனைக்கு இணையாக உளுந்தூர்பேட்டை மருத்துவ மனையை தரம் உயர்த்தி அதில் டயாலி சிஸ் பிரிவை உருவாக்க வேண்டும், சர்க்கரை ஆலை கழிவுகளை பயன்படுத்தி காகித தொழிற்சாலை அமைத்து இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்பை உரு வாக்க வேண்டும், ஆசனூர் சிப்காட் தொழிற்சாலையை மேம்படுத்தி மேலும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பிரச்சாரம் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வாலிபர் சங்க முன்னாள் மாநிலச் செய லாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரு மான எஸ்.கே.மகேந்திரன் கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்டச் செயலாளர் எம்.கே .பழனி,எஸ்.எப்.ஐ.மாவட்டச் செய லாளர் பி.சின்னராசு,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.சதீஷ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஏ.தங்கமணி, வேலா.பாலு,டி.ராஜீவ் காந்தி, டி.மணிகண்டன் எம்.தீபன்ராஜ், எம்.வீரன்,ஜே.இம்ரான், ஏ.ஏழுமலை,கே.சக்கரவர்த்தி, எ. ரிச்சர்ட்பிரபு, டி.ஐயப்பன், எம்.விஜய குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.