districts

img

மான்செஸ்டர் சென்று திரும்பிய இளம் கால்பந்து வீரர்கள்

 சென்னை.ஏப். 3- சென்னையைச் சேர்ந்த இளம் வீரர் பிரியரஞ்சன் உள்ளிட்ட நான்கு இளம் வீரர்கள், புகழ்பெற்ற மான்செஸ்டர் யுனைட்டெட் கிளப்புக்கு சென்று அங்குள்ள அனுபவங்களைப் பெற்றுத் திரும்பியுள்ளனர்.  அப்போலோ டயர்ஸ் மற்றும் மான்செஸ்டர் யுனைட்டெட் கிளப் இணைந்து ஓன்றாக சேர்ந்து விளையாடுவோம்  என்ற திட்டத்தின் கீழ், இளம் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. நாடு முழுவதும் 19 மையங்களில், பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்வில், மொத்தம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வளர்ந்து வரும் கால்பந்து வீரர்களில் இருந்து நான்கே நான்கு வீரர்கள் மட்டும் இறுதி செய்யப்பட்டனர். சென்னையைச் சேர்ந்த பிரியரஞ்சன், சண்டிகரைச் சேர்ந்த ரொனால்ட் சிங், மேகாலயாவைச் சேர்ந்த ஃபெட்ரிக் குர்பன், புனேவைச்சேர்ந்த குனால் யீலே ஆகிய நான்கு பேருக்கு மான்செஸ்டர் யுனைட்டெட் மைதானத்தில் போட்டியைப் பார்க்கும் அனுபவம், பயிற்சி மையங்களில் பயிற்சியாளர்கள் மற்றும் ஜாம்பவான்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது.  தற்போது மூன்றாவது ஆண்டாக இளம் வீரர்களை அடையாளும் காணும் பணி நடைபெற்று வருகிறது.