districts

img

சாம்சங் தொழிலாளர்களுக்கு யமஹா ஆதரவு கரம் ..

ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் மற்றும் 8 மணி நேர வேலை உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 16 நாட்களாக சாம்சங் தொழிலாளர் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களுக்கு இந்திய யமஹா மோட்டார் தொழிலாளர் சங்கம் ஆதரவு தெரிவித்து போராட்ட நிதியாக ரூ.20 ஆயிரத்தை, யமஹா செயல் தலைவர் எம்.தமிழழகன் வழங்க, சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க பொருளாளர் ஆர்.மாதேசு பெற்றுக் கொண்டார். சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், சாம்சங் சங்கத் தலைவர் இ.முத்துக்குமார், திருப்பெரும்புதூர் பொது தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அ.ஜெனிட்டன், சாம்சங் சங்க பொதுச் செயலாளர் பி.எல்லன், யமஹா பொதுச் செயலாளர் எம்.மதன்பாரதி, பொருளாளர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.