சென்னை, செப். 10- டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி விலங்கியல் துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் உலக எழுத்தறிவு நாள் கருத்தரங்கம் சென்னை வியாசர்பாடியில் முனைவர் சி.கலைமகள் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் நீதிபதி கே.சந்துரு “சட்டத்தின் பார்வையில் கல்வி” என்ற தலைப் பிலும், அறிவியல் இயக்க முன்னாள் பொதுச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி “அறிவியல் பார்வையில் கல்வி” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர். சட்டக் கல்லூரி பேராசிரியர் வி.மதி வாணன், அறிவியல் இயக்கம் வடசென்னை மாவட்டச் செயலாளர் அ.அரவிந்த் ஆகி யோர் கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினர். சமூக செயல்பாட்டாளர் இளங்கோ அறிவியல் குறித்த பாடல்களை பாடினார். முன்னதாக டி.மலைச் செல்வி வரவேற்றார். எம்.சசிகலா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் விலங்கியல் துறை பேராசிரி யர்கள் டி.மதுரம், ஆர்.சரவணன், பி.பால சுப்பிரமணியன், என்.திருநாவுக்கரசு, கே.மோகன், அறிவியல் இயக்க நிர்வாகி கள் அனுரத்னா, விஸ்வநாதன், கிருஸ்து தாஸ், ஷாலினி ஜெரால்டு, ஆஷா, ரேவதி, சுப்பிரமணியன், கலைச்செல்வி, செல்வ குமாரி, கோபிநாத், பிரவின் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.