சென்னை,நவ.21- உயர்தரம் வாய்ந்த கிரிக்கெட் விளையாட்டு சாதனங்களை அரசுப்பள்ளி மற்றும் உள்ளூர் கிரிக்கெட் கிளப்புகளுக்கு இலவசமாக வழங்கும் பியாண்ட் பவுண்ட ரீஸ் (எல்லைக்கு அப்பால்) என்ற முன்முயற்சியை டி.பி. வேர்ல்டு நிறுவனம் தொடங்கியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடை பெற்ற விழாவில் ஐசிசி ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் போது வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிரிக்கெட் சாதனங்களில் இதுவரை 750க்கும் மேற்பட்ட சாதனங்கள் வழங்கப்பட்டன. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, டி.பி.வேர்ல்டு மத்திய கிழக்கு வட ஆப்பிரிக்கா இந்திய துணைக்கண்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரிஸ்வான் சூமர் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர். கிரிக்கெட் சாதனங்கள் அடங்கிய சரக்கு பெட்டகம் சென்னை லயோலா கல்லுரியில் நிறுத்தப்பட்டு சென்னையில் உள்ள பிற அரசு பள்ளிகளுக்கும் விநியோகம் செய்யப் படவுள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது ஒவ்வொரு 100 ரன்களுக்கும் 10 கிட்களை வழங்குவதாக டி.பி.வேர்ல்டு நிறுவனம் உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.