கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள டாக்ரோஸ் கெமிக்கல் இந்தியா நிறுவன தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ஆலை இயக்குநருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் சிஐடியு தொழிற்சங்க செயலாளர் எம்.தேவநாதன், தலைவர் ஆர்.கோவிந்தன் பொருளாளர் பி.குமார் டிவிஎஸ் தொழிற்சங்க செயலாளர் எஸ்.அருள் செல்வன், தலைவர் கே. சக்திவேல், பொருளாளர் டி. வேல்முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.