திருவள்ளூர், அக் 28- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் முன்முயற்சியால் சிறு புழல்பேட்டையில் ஆரம்ப சுகாதார துணை நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் துவங்கியது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டியை அடுத்த சிறுபுழல்பேட்டை ஊராட்சியில் முத்துரெட்டி கண்டிகை, புதுப்பேட்டை, ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட கிராமத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்க கூடிய பகுதியில் ஆரம்ப சுகாதார துணை நிலையம் கடந்த 10 ஆண்டு களுக்கு மேலாக பழுதடைந்து கிடக்கிறது. இதனால் அந்த கிராமங்களில் கருவுற்ற தாய்மார்கள், குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வெகு தூரம் செல்ல வேண்டி உள்ளது. மேலும் நீரிழிவு நோயாளிகள், காய்ச்சல் போன்ற நோய்களுக்கு கூட மருத்துவம் பார்க்க முடியவில்லை. அடுத்த தனியார் மருத்துவமனைக்கு சென்றால் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்ய வேண்டும் என்ற நிலை உள்ளதால் மக்கள் வேதனையில் உள்ளனர். இந்த நிலையில் சிறுபுழல்பேட்டையில் ஆரம்ப சுகாதார துணை நிலையம் அமைப்பதற்கு, புதிய கட்டடம் எழுப்பி அங்கு மீண்டும் சுகாதார நிலையம் செயல்பட வேண்டும் என பொது மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து சிபிஎம் சிறுபுழல் பேட்டை ஒன்றிய கவுன்சிலர் எம்.ரவிகுமார் மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரிடம் தெரிவித்தின் மூலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆக 14 அன்று பணி ஆணை வழங்கியுள்ளார். கட்டிடம் கட்ட சிஎஸ்ஆர் நிதியாக ரூ.39 லட்சத்து 28 ஆயிரத்து 207 ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் சிபிஎம் சிறுபுழல் பேட்டை ஒன்றிய கவுன்சிலர் எம்.ரவிகுமார் தலைமையில் பாழடைந்த கட்டடத்தின் அருகில் புதிய கட்டடங்களை அமைப்ப தற்கான பணி சனிக்கிழமையன்று (அக் 26), துவங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலக செயற்பெறியாளர் மணி மேகலை, உதவி செயற்பெறியாளர் மதன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.