districts

img

விழுப்புரம் மாவட்டத்தில் 100 நாள் வேலையில் வேலை செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு பணி

விழுப்புரம் மாவட்டத்தில் 100 நாள் வேலையில் வேலை செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு பணி செய்து 50 நாட்கள் ஆகியும் சம்பளம் வழங்காததை கண்டித்து செவ்வாய்க்கிழமை விழுப்புரம்  ரயில் நிலையம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர்  வி.இராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் சி.கலியபெருமாள்,  ஒன்றிய தலைவர்கள் எஸ்.செல்வி, எம்.மும்மூர்த்தி,அண்ணாதுரை  உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை  வலியுறுத்தி முழக்கமிட்டனர்.