districts

img

ஸ்ரீராம் இலக்கியக் கழக பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்று சென்னை மாணவி சாதனை!

சென்னை,அக்.8- ஸ்ரீராம் இலக்கியக் கழகம், தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள பள்ளி மற்றும்  கல்லூரி மாணவர்களுக்காக நடத்திய திருக்குறள் பேச்சுப் போட்டி இறுதிச் சுற்றில், சென்னை, முகப்பேர், வேலம்மாள் மேல்நிலைப் பள்ளி மாணவி க. இலக்கியா இடைநிலைப் பிரிவில் மூன்றாம் பரிசை வென்று சாதனை படைத்துள்ளார்.     அரை இறுதிச் சுற்றில் வெற்றி பெற்ற  36 போட்டியாளர்கள் (இடைநிலை, மேல்நிலை, கல்லூரி என ஒவ்வொரு பிரிவி லும் தலா ஒருவர் வீதம் 12 மண்டலங்களைச் சேர்ந்த வெற்றியாளர்கள்) இறுதிச் சுற்றில் பங்கேற்றனர்.    இதில் மாநில அளவில் இடைநிலைப் பிரிவில்  பா. வர்ஷா, ஷெம்ஃபோர்ட் ஃபியூச்ச ரிஸ்டிக் பள்ளி, சிதம்பரம் (புதுச்சேரி மையம்)  முதல் பரிசையும், சி. மாதிரி ஓவியா, இரத்தின கிரி பகீரதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, இரத்தினகிரி (வேலூர் மையம்) 2வது பரிசை யும், க. இலக்கியா,வேலம்மாள் மேல்நிலைப்  பள்ளி, முகப்பேர், சென்னை (சென்னை மையம்) மூன்றாம் பரிசையும் பெற்றார் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசுடன் கோப்பையும் சான்றி தழும் வழங்கப்பட்டன. பாடலாசிரியர் உமாதேவி, எழுத்தாளரும் இதய மருத்துவ  நிபுணருமான டாக்டர் மகுடமுடி, செய்தி வாசிப்பாளர் திவ்யா சந்திரசேகர் ஆகி யோர் நடுவர்களாக இருந்து போட்டி யாளர்களை தேர்வு செய்தனர். ஸ்ரீராம் குழுமத்தின் துணைத்தலைவர் சுரேஷ் பரிசுகளை வழங்கினார்.