districts

img

போதைக்கு எதிராக பெண்களை அணிதிரட்ட வேண்டும்: மாதர்சங்கம் வலியுறுத்தல்

புதுச்சேரி, செப். 21- அனைத்திந்திய ஜனநாய மாதர் சங்கத்தின் புதுச்சேரி  வில்லியனூர், மண்ணாடிப்பட்டு கொம்யூன் கமிட்டிகள் இணைந்து போதையை ஒழிக்க பாதையை வகுப்போம் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் வில்லியனூரில் நடை பெற்றது. கமிட்டி தலைவர்கள் மலர்விழி, சிவசங்கரி கூட்டாக தலைமை தாங்கி னார்கள்.சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தரராமன் கருத்தரங்கத்தை துவக்கி வைத்து பேசி னார். ஓய்வுபெற்ற சுங்கத்துறை அதிகாரி சண்முகசுந்தரம், சிஐடியு புதுச்சேரி மாநில தலைவர் பிரபுராஜ், மாதர் சங்க மாநில தலைவர்முனியம்மாள்,செயலாளர் இளவரசி, நிர்வாகிகள் சத்தியா, மாரிமுத்து, உமாசாந்தி, தவமணி,மங்கலட்சுமி உள்ளிட்ட திரளான பெண்கள் கருத்த ரங்கத்தில் பங்கேற்றனர்.முன்னதாக பேசிய தலைவர்கள் புதுச்சேரியில் போதைக்கு எதிராக பெண்களை அணி திரட்ட உறுதியேற்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தீர்மானம் பள்ளி கல்லூரிகள்,வழிப்பாட்டு தலங்கள் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மதுபான கடைகளை புதுச்சேரி அரசு மூட வேண்டும்,மதுபான கடைகள் இயங்கும் நேரத்தை வரைமுறைப்படுத்த வேண்டும். கஞ்சா மற்றும் போதை பொருட்களை முற்றிலும் தடைசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் கருத்தரங்கத்தில் வலியுறுத்தப்பட்டது.