திருவண்ணாமலை நகரம் திருக்கோவிலூர் சாலை, திருவள்ளுவர் சிலை அருகே 37 ஆவது வார்டில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து அப்பகுதி மக்கள், பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலிக்குடங்களுடன் நடைபெற்ற மறியல் போராட்டத்தை தொடர்ந்து, அங்கு வந்த நகராட்சி அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.