districts

டாஸ்மாக் கடையை மூட பெண்கள் வலியுறுத்தல்

விழுப்புரம், ஜூன்.11-

    விழுப்புரம் சாலாமேட்டிலுள்ள அரசு மதுபானக் கடையை (டாஸ்மாக்) நிரந்தர மாக மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சி யரிடம் பெண்கள் வலியுறுத்தினர்.

     விழுப்புரம் சாலாமேடு ரயில்வே கேட் அருகில் குடியிருப்புகளின் மையப்பகுதி யில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இக்கடைக்கு மது அருந்த வருபவர்கள் சாலை மற்றும் ஏரிக்கரையில் அமர்ந்து மது குடிப்பதுமாக உள்ளனர்.

     போதை தலைக்கேறியதும் சாலை யிலேயே அலங்கோலமாக கிடக்கின்றனர். இதனால் பெண்கள், குழந்தைகள் யாருமே நடமாடுவதற்கு முடியவில்லை. அச்சமாக உள்ளது.  

    மேலும், பள்ளி குழந்தைகளிடம் நகை திருட்டில் ஈடுபடுவதும், பெண்களை அறு வறுக்கத்தக்க வார்த்தைகளால் பேசுவதும், வேலைக்கு செல்லும் வாகன ஓட்டிகளிடம் தகராறு செய்வதும் என தினம், தினம் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரி வித்தால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

     குடியிருப்புகளுக்கு மத்தியிலும், ஏரிக்கரையிலும் அமர்ந்து மது குடித்து விட்டு தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் குப்பைகளை அங்கேயே போட்டுவிட்டு செல்வதால் குப்பை கிடங்காக மாறி வருகிறது. எனவே அந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சி.பழனியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

   அந்த மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் பரிசீலனை செய்வதாக கூறினார்.